‘நாயகன்’ உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஜே.கே.ரித்தீஷ். இவர் முன்னாள் எம்.பி.யாகவும் இருந்துள்ளார். கடந்த வருடம் நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
இந்நிலையில், சமீபத்தில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்ற ஜே.கே.ரித்தீஷுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் உடனடியாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
ரித்தீஷின் உடல்நிலை குறித்து கேள்விப்பட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று அவரது உடல் நிலை குறித்து நலம் விசாரித்து வருகின்றனர்.