நடிகர் கலாபவன் மணியின் மரணத்திற்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. மார்ச் 6ம் திகதி இறந்த அவரது உடலின் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் ரத்தத்தில் மீத்தைல் ஆல்கஹால் கலந்திருந்ததால் அவரை யாரேனும் விஷம் கொடுத்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
கேரளா போலீசின் விசாரணையில் திருப்தி அடையாத மணியின் குடும்பத்தினர் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் Pinarayi Vijayan தற்போது சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அவர்களாவது உண்மையை வெளிக்கொண்டுவருவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.