கிரிக்கெட்டில் சாதனைகளை படைத்த சச்சின் டெண்டுல்கர், திரைப்படத்துறையில் என்றும் அழியாத படங்களை வழங்கிய, தன் கண்ணீரை மறைத்துக்கொண்டு உலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளினுக்கு அஞ்சலி செலுதித்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சச்சின் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக இயங்கி வருகிறார். இந்நிலையில் சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் சார்லி சாப்ளின் சிலை அருகே சிரித்தப்படி இருக்கும் தன் படத்தை பகிர்ந்துள்ளார்.
மேலும் அந்த படத்திற்கு கீழே “நம்மை சிரிக்க வைக்க தவறாத ஒரு மாபெரும் நகைச்சுவை நடிகர், இயக்குனர் சார்லி சாப்ளின்” என்று சாப்ளினை புகழ்ந்துள்ளார் சச்சின்.