மத்திய நகர்புற மேம்பாட்டுத் துறை மந்திரி வெங்கைய்யா நாயுடு, தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: மோடி ஒரு நோக்கத்துடன் செயல்படுகிறார். மக்களும் இதனை புரிந்து கொள்ள தொடங்கி உள்ளனர். மோடி என்றால் வளர்ந்த இந்தியாவை இருவாக்குபவர் என்று அர்த்தம் (Modi means ´Making of Developed India).
அதனால் தான் நாட்டு மக்கள் நரேந்திர மோடியை பின் தொடர்கிறார்கள். மோடி தனது மனதில் பட்டதில் மான் கி பாட் நிகழ்ச்சியில் பேசுகிறார். மக்கள் அதனை ஏற்றுக் கொள்கின்றனர்.
தூய்மை இந்தியா திட்டம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.