நடிகை சமந்தா, தமிழ்-தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சமீபத்தில் இளம் நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்றும் அவர் அறிவித்து இருந்தார். நடிகர் பெயரை சொல்ல சமந்தா மறுத்து விட்டதால், அவர் யார்? என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள்.
பின்னர், அந்த நடிகர் நாக சைதன்யா என்பது உறுதிபடுத்தப்பட்டது. இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார். தெலுங்கு படங்களில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இவர்களுக்கு இந்த வருடம் இறுதியில் நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும் அடுத்த வருடம் தொடக்கத்தில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், சமந்தாவும் நாக சைதன்யாவும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வது போன்ற வீடியோ படம் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐதராபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டின் பால்கனியில் இருவரும் ஜோடியாக உலவும் இந்த படத்தை யாரோ தூரத்தில் இருந்து ரகசியமாக எடுத்து இணைய தளத்தில் பரவ விட்டுள்ளனர். இந்த வீடியோ படத்தை பார்த்து சமந்தாவும், நாக சைதன்யாவும் அதிர்ச்சியாகி உள்ளனர்.
இருவரும் ஆழமாக காதலிப்பதால் பிரிய மனமின்றி ஒரே வீட்டில் வசிப்பதாக கூறப்படுகிறது. இந்த வீடு நாக சைதன்யாவுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பல இந்தி நடிகைகள் திருமணத்துக்கு முன்பு இதே போல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து உள்ளனர்.
தீபிகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் திருமணம் செய்ய முடிவு எடுத்து தற்போது ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.