இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் தேக்கம் அடைந்துள்ள வழக்குகள் குறித்த தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி 2 கோடியே 20 லட்சத்து 75 ஆயிரத்து 329 வழக்குகள் தேக்கம் அடைந்து இருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இதில் 31 லட்சத்து 45 ஆயிரத்து 59 வழக்குகள், அடுத்த விசாரணை தேதி குறிப்பிடாமல் நிலுவையில் உள்ளன. இவற்றில் 21 லட்சத்து 75 ஆயிரத்து 750 வழக்குகள், கிரிமினல் வழக்குகளாகும்.
9 லட்சத்து 69 ஆயிரத்து 309 வழக்குகள், சிவில் வழக்குகள் ஆகும். விசாரணை தேதி குறிப்பிடாமல் நிலுவையில் உள்ள வழக்குகளில் குஜராத் (20.46 சதவீதம்) முதலிடத்தையும், மேற்குவங்காளம் (14.96 சதவீதம்) 2-வது இடத்தையும் பெற்றுள்ளது.