சென்னை இளம்பெண் சுவாதி கொலை தொடர்பாக சமூக வலைதளங்களில் பலர் கண்டனமும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ளனர். பலர் சினிமா காட்சிகளை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ளனர்.
காதலில் தோல்வி அடையும் கதாநாயகன் காதலிக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவது போன்று சினிமாவில் காட்சிகள் உள்ளன என்று ஒருவர் வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர் சுவாதி மரணத்துக்கு பிறகாவது இது போன்ற காட்சிகளில் நடிப்பதை கதாநாயகர்கள் தவிர்க்க வேண்டும் என்று கருத்து பதிவு செய்துள்ளார்.
இதனை நடிகையும், டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளருமான லட்சுமிராமகிருஷ்ணன் வரவேற்று கருத்து வெளியிட்டுஉள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:-
சுவாதியின் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.
இது போன்ற செயல்களில் சினிமாவின் தாக்கமும் இருக்கிறது. சினிமாவில் காதல் அழகானதாக காட்டப்படுகிறது. அதற்காக வன்முறையில் ஈடுபடுவதும் நியாயப்படுத்தப்படுகிறது. பெண்களை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.
எல்லோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்று மகளுக்கு மட்டுமின்றி மகனுக்கும் சொல்லித்தரவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில..பெண்கள்,,கொலை,.செய்யபடுவதற்கு,,,பெண்களே,,75% காரணம்..(அம்மா..மனைவி..பாட்டீ..மாமியார்,,நாத்தனாா்கள்)