டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் இந்தி நடிகர் சல்மான்கான் கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியில் சல்மான் கானிடம் அவரது திருமணம் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர்,
“எனது திருமணம் குறித்த பேச்சு கடந்த 20 முதல் 25 வருடங்களாக தொடர்ந்து வருகிறது. எனது வாழ்க்கையில் அந்த நாள் என்று வரும் என்று தெரியாது. ஆனால் அது நடக்கும். இதற்காக என்னை குடும்பத்தினர் எவ்வளவு வற்புறுத்துகின்றனர் என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்” என்றார்.
50 வயதை கடந்துவிட்ட இவர் தற்போது லூலியா வன்டூர் என்ற வெளிநாட்டு பெண்ணை காதலித்து வருகிறார். விரைவில் இவர்களுக்கு திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.