மராட்டிய சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் மும்பையில் நடைபெற்று வருகிறது. சட்டசபையில் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ., அனில் கோடே பேசியதாவது:-
இந்த மண்ணின் மைந்தரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மராட்டிய அரசின் உயரிய விருதான ‘மகாராஷ்டிரா பூஷண்’ விருது வழங்கி கவுரவிக்க வேண்டும். ரஜினிகாந்த் கோலாப்பூர் மாவட்டத்தில் சிவாஜி கெய்க்வாட் என்ற பெயரில் பிறந்தவர். பட வாய்ப்பு தேடி தமிழ்நாடு சென்றார். இன்றைக்கு திரைத்துறையில் கடவுளின் அவதாரத்துக்கு நிகரான அந்தஸ்தை பெற்றிருக்கிறார்.
அவரது ´கபாலி´ படம் உலகம் முழுவதும் 8 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி, இந்திய சினிமாவில் அவருக்கு உரிய அந்தஸ்தை பறைசாற்றுகிறது என்று தெரிவித்தார். மேலும், அவர் கூறும்போது, ரஜினிக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தும் வண்ணம், மராட்டிய சட்டசபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.