அஜித் நடிக்க இருக்கும் அவருடைய 57-வது படத்தில், 2 கதாநாயகிகள் இருக்கிறார்கள். ஒரு கதாநாயகியாக காஜல் அகர்வாலும், இன்னொரு கதாநாயகியாக அக்ஷராஹாசனும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தம்பி ராமைய்யா, கருணாகரன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். வில்லன் வேடத்துக்கு முக்கிய நடிகர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. படப்பிடிப்பு பல்கேரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற இருக்கிறது.
இது, சர்வதேச குற்றம் தொடர்பான திகில் படம். அனிருத் இசையமைக்கிறார். இவருடைய இசையில், ஒரு பாடல் பதிவாகி இருக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவிருக்கின்றனர். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாகவிருக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை பல்கேரியாவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கவிருக்கும் இப்படத்தை பிரமாண்டமான முறையில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.