‘கபாலி’ படத்தில் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டதற்கான ஐந்து காரணங்களை இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். அதுகுறித்து கீழே பார்ப்போம்…
ரஜினி நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் படம் ‘கபாலி’. இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கியிருந்தார். ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ என இரு படங்கள் இயக்கிய ஒரு இயக்குனர் ரஜினியை வைத்து படம் இயக்குகிறார் என்றபோதே பல்வேறு தரப்பிலும் பலவிதமான கேள்விகள் எழுந்தன.
‘கபாலி’ படத்தில் ரஜினி நடிக்க ஒத்துக்கொண்டதற்கு ஐந்தே ஐந்து காரணங்கள்தான் என இப்படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘கபாலி’ படத்தில் ரஜினியிடம் கதை கூறியதும் ஐந்து காரணங்களுக்காக உடனே ஒத்துக் கொண்டார். முதலில் வயது, தன்னை வயதானவராக நடிக்க வைக்கப் போவதாக சொன்னது அவருக்கு பிடித்திருந்தது.
பிறகு, மலேசியா பின்னணியில் கதை உருவாகிறது என்பது, அதன்பிறகு, பாட்டு, டான்ஸ் கிடையாது. வழக்கமான சண்டைக் காட்சிகள் கிடையாது. இதுபோன்ற காரணங்களுக்காகவே ரஜினி இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக ரஞ்சித் கூறினார்.
இப்படம் முதல் ஒரு வாரத்தில் ரூ.320 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. மலேசியாவிலும் நேற்று முதல் மலாய் மொழியில் இப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாரமும் ‘கபாலி’ படம் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.
எனவே இப்படத்தின் வசூல் மிகப்பெரிய உயரத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்ட முறையில் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.