தென் கொரியா, வோக்ஸ்வாகன் நிறுவனத்தால் விற்கப்பட்ட வி.ட்புள்யு, பென்ட்லி மற்றும் ஆடி ஆகியவற்றின் 80 விதமான வாகனங்களின் விற்பனையை இடைநிறுத்தம் செய்தித்துள்ளது.
அதிகாரிகள், ஜெர்மன் நிறுவனம் சட்டத்தை மீறி, மாசு மற்றும் இரைச்சல் அளவுகள் குறித்த போலியான ஆவணங்களை சமர்ப்பித்து கடந்த 10 ஆண்டுகளில் 80,000க்கும் மேற்பட்ட வாகனங்களை விற்றதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வி.ட்புள்யு நிறுவனம் பேசுகையில், அது தற்போது ஆவணங்களை தற்போது புதுப்பித்துள்ளது என்றும் விற்பனைக்கான தடை அதிகபடியான நடவடிக்கை என்று கூறியது.
வோக்ஸ்வாகன் நிறுவனத்திற்க்கு 16 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அது மேலும் பல நாடுகளில், டீசல் எரிபொருளை பயன்படுத்தி ஓடுகிறன்ற சில வாகனங்களில் மாசு அளவுகள் குறித்த சோதனைகளில் போலியான விவரங்களை கொடுத்ததாக, சட்ட நடவடிக்கையை சந்தித்துவருகின்றது.