இந்தி பட உலகின் முன்னணி கதாநாயகன் சல்மான்கான். இவருக்கு 50 வயது ஆகிறது. ஏற்கனவே ஐஸ்வர்யாராய், கத்ரினா கைப், சினேகா உள்ளல், சங்கீதா பிஸ்லானி, பாகிஸ்தான் நடிகை சோமி அலி உள்பட பல நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட அவர் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்தார். குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று பிளாட்பாரத்தில் தூங்கியவர் மீது ஏற்றி கொன்ற வழக்கு, மான்களை வேட்டையாடிய வழக்கு போன்றவற்றிலும் சிக்கினார்.
தற்போது அந்த வழக்குகளில் இருந்து அவர் விடுதலையாகி இருக்கிறார். சமீப காலமாக ருமேனிய அழகி லூலியாவுடன் சல்மான்கான் ஜோடியாக சுற்றி வந்தார். தனது பிறந்த நாளன்று லூலியாவை வீட்டுக்கு அழைத்து கேக் ஊட்டி விட்டார். பண்ணை வீட்டுக்கும் அழைத்து சென்று குதிரை சவாரி செய்ய வைத்தார். இந்த படங்கள் இணையதளங்களில் வெளியாகி அவர்கள் காதலிப்பதை உறுதிப்படுத்தின. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சல்மான்கானும், லூலியாவும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தற்போது பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. லூலியா தனது பெயருடன் கான் என்ற பெயரை சேர்த்து இருப்பதாக கூறப்படுகிறது.
ருமேனிய பத்திரிகைகள் லூலியாவுக்கு திருமணம் நடந்து விட்டதாகவும், அவரை திருமதி லூலியா கான் என்று குறிப்பிட்டும் செய்தி வெளியிட்டுள்ளன. தனது திருமணத்தை சல்மான்கான் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.