´வேலையில்லாப் பட்டதாரி´ படத்துக்குப்பின் தனுஷ்-அமலாபால் மீண்டும் இணைந்திருக்கும் படம் ´வடசென்னை´. வெற்றிமாறன் இயக்கும் இப்படம் மூன்று பாகங்களாக உருவாகவுள்ளது.
தற்போது இப்படத்தின் முதல் பாகத்தை மிகப்பெரிய அரங்குகள் அமைத்து படம் பிடித்து வருகின்றனர். தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவான ´பொல்லாதவன்´, ´ஆடுகளம்´ படங்களின் வெற்றி காரணமாக ´வட சென்னை´ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தில் அமலாபால் மீனவப்பெண்ணாக நடித்து வருகிறார். இதற்காக தற்போது மீனவப்பெண்களின் மொழி மற்றும் அவர்களின் நடை, உடை, பாவனை போன்றவைகளை அமலாபால் கற்று வருகிறார். ´வடசென்னை´ படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
´வட சென்னை´யின் மூன்று பாகங்களிலும் அமலாபால் வருவது போன்று வெற்றிமாறன் கதையை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.