தென்னாப்ரிக்காவில் பிரிட்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியை அதன் சர்ச்சைக்குரிய சிகை அலங்காரம் குறித்த விதிகளை நீக்குமாறு அதன் மாகாணத்தின் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதில் பயிலும் கருப்பின பெண்கள், முடியை நேர் செய்யுமாறும் முடியிலுள்ள முடிச்சுகளை நீக்குமாறும் கூறப்பட்டதாக புகார் கூறியுள்ளனர்.
பள்ளியில் இனவாதம் கடைப்பிடிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து, விசாரணை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்ரிக்க மொழி பேசும் மாணவர்களை கேலி செய்வதையும் அவர்கள் கண்டித்துள்ளனர்.
வார இறுதியில் மாணவர்கள் நடத்திய போராட்டம் சமூக ஊடகங்களில் பெரிதும் பகிரப்பட்டது அதில் பெரும்பாலான மாணவர்கள் ஆப்ரிக்க சிகை அலங்காரத்தில் காணப்பட்டனர்.