´லத்திகா´, ´கண்ணா லட்டு தின்ன ஆசையா´, ´ஐ´ உள்பட பல படங்களில் வித்தியாசமான கோணத்தில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் பவர் ஸ்டார். இவர் தற்போது ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க’ என்ற படத்தில் முதல்-அமைச்சர் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இந்த படம் குறித்து நேற்று சேலத்திற்கு வந்த நடிகர் பவர்ஸ்டார் நிருபர்களிடம் கூறியதாவது:- சாதிக்க நினைக்கும் இயக்குனர் ராசாக்கான் இயக்கியுள்ள இந்த படத்தில் 5 ஆயிரம் கலைஞர்கள் நடித்துள்ளனர். 250-க்கும் மேற்பட்ட இடங்களில் வைத்து பிரம்மாண்டமாக சூட்டிங் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் எனது நீண்ட நாள் ஆசையான முதல்-அமைச்சர் வேடத்தில் நான் நடித்துள்ளேன். மக்கள் குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. வருகிற தீபாவாளி பண்டிகைக்கு படம் வெளியாக வாய்ப்புள்ளது.
மலையாளம், இந்தி, தெலுங்கு உள்பட பிற மொழி படங்களில் நடிக்க ஆசையாக உள்ளது. ஆனால் யாரும் அதற்கு அழைக்கவில்லை. விரைவில் அரசியல் கட்சி தொடங்குவேன். மக்கள் என்னை தேர்வு செய்தால் மக்களுக்கு நல்லது செய்வேன் என்றார். அப்போது அவருடன் பட இயக்குனர் ரசாக்கான் உடன் இருந்தார்.