பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியை தெரியாதவர்கள் யாரும் இல்லை. இவரின் நகைச்சுவையான பேச்சுக்கு பலரும் ரசிகர்கள். இதுமட்டுமின்றி கங்கா கௌரி என்ற படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் இவர் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தவிட்டதாக ஒரு செய்தி உலா வந்தது.
அவருக்கு எந்த விபத்தும் ஏற்படவில்லையாம், நன்றாக தான் இருக்கிறாராம். மேலும், வேண்டுமென்றே இப்படி தகவல்களை ஒரு சிலர் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள் என லியோனியே புகார் தெரிவித்துள்ளார்.
லியோனி ஆளுங்கட்சியை பல மேடைகளில் ரைடு விடுவார், இதை அந்த கட்சி ஆதரவாளர்கள் தாங்க முடியாமல் தான் இப்படிப்பட்ட வேலைகளை செய்கிறார்கள் என அவர் தரப்பில் கூறப்படுகின்றது.