சென்னையில் உள்ள பாடசாலை ஒன்று தங்களுடைய பாடசாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயிலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்த அழைப்பை ஏற்று கெயில், பள்ளியின் நிகழ்ச்சிக்கு சென்று கலந்து கொண்டார். அங்கு அவருக்கு மிகவும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அந்த நிகழ்ச்சியில் தனது கால்களை அசைத்து நடனமாடி எல்லோரையும் மகிழ்வித்தார்.
முன்னதாக தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வதற்காக அவர் சென்னை வந்து, போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.