நடிகர்களையும், அரசியலையும் என்றுமே பிரிக்க முடியாது. அப்படித்தான் இந்த நடந்து முடிந்த நடிகர் சங்க தேர்தலும் இருந்தது.
ஜெயலலீதா கைவிட்ட ஒரே காரணத்தால் சரத்குமார் அணி தோல்வியடைந்தது, ஆனால், மீண்டும் பொறுப்பேற்ற விஷால், நாசர் அணியும் ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்படுவதாக ஒரு கிசுகிசு எழுந்துள்ளது.
அதை நிரூபிக்கும் பொருட்டு நடிகர் சங்கம் நடத்திய கிரிக்கெட் போட்டியை எதிர்கட்சி தொலைக்காட்சிக்கு விற்றனர், இதன் காரணமாகவே ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மற்றும் நடிகர் சங்க துணை தலைவர் நடிகர் கருணாஸ் சில நாட்களாக அதிருப்தியில் உள்ளாராம்.
மேலும், தன் நடிகர் சங்க துணை தலைவர் பதவியை கூட ராஜினாமா செய்துள்ளதாக ஒரு செய்தி உலா வருகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் என்னவெல்லாம் நடக்கும் என்று.