காஷ்மீரில் கடந்த ஜூலை 9-ந் திகதி ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி பர்கான் வானி உள்ளிட்ட 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அன்று முதல் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த வன்முறை சம்பவங்களில் பொலிஸார் 2 பேர் உள்பட 83 பேர் உயிர்இழந்து உள்ளனர்.
இந்தநிலையில், நேற்று பிரிவினைவாத அமைப்பை சேர்ந்தவர்கள் பன்டிபோரா, கந்தர்பால், சோபியான் ஆகிய 3 மாவட்டங்களில் பேரணி நடத்துவதற்கு அழைப்பு விடுத்து இருந்தனர். எனவே அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் அந்த 3 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
மேலும், தலைநகர் ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால் அங்கு தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இருந்த போதிலும் மற்ற பகுதிகளில் இயல்பு வாழ்க்கை ஓரளவு சீரடைந்து வருகிறது.