தூத்துக்குடி இடக்கை சுழற்பந்து வீச்சாளர் கணேஷ் மூர்த்தி, ஒரே ஓவரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள் தலைவன் சற்குணம், கோபிநாத், சதீஷ், சசிதேவ் ஆகியோரின் விக்கெட்டுகளை சூறையாடி மிரள வைத்தார்.
இதில் மூன்று விக்கெட்டுகளை தொடர்ச்சியாக (ஹாட்ரிக்) வீழ்த்தியதும் அடங்கும். தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் சாய்த்த 2-வது பந்து வீச்சாளர் கணேஷ் மூர்த்தி ஆவார். ஏற்கனவே கோவை கிங்ஸ் வீரர் சிவகுமார் தூத்துக்குடிக்கு எதிராக ´ஹாட்ரிக்´ சாதனை படைத்திருந்தார்.
இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் தலைவர் தினேஷ் கார்த்திக்கின் அரைசதத்தின் உதவியுடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை தோற்கடித்த தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி இறுதிப்போட்டியிலும் இதே போன்று தினேஷ் கார்த்திக்கின் அரைசதத்தின் துணையுடன் வாகை சூடியிருக்கிறது.
நேற்றைய ஆட்டத்தை காண 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு இருந்தனர்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் சர்வதேச போட்டியில் விளையாடிய வீரர்கள் யாரும் கிடையாது. அப்படி இருந்தும் இறுதி சுற்று வரை முன்னேறி வியப்பூட்டியது. 2-வது இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 60 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.