டைனோசர்களின் மிகப்பெரிய அழிவுக்கு ஓரின சேர்க்கையே காரணம் என பிரபல விஞ்ஞானி லூயிஸ் தெரிவித்துள்ளார்.
சுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு ஆண்டுகளுக்கு முன் பூமியில் டைனோசர்கள் வாழ்ந்து வந்தன. அப்போது இவைதான் பூமியின் மிகப்பெரிய உயிரினங்கள். மிக அதிகமான எடை, மாறிவந்த காலச்சூழலால் டைனோசர்கள் மடிந்திருக்கலாம் என்று ஒரு கருத்து கூறப்படுகிறது. ஆனால் 1980-ல் லூயிஸ் அல்வரேஸ் என்ற புவி ஆராய்ச்சியாளர் ஓர் ஆய்வு செய்தார். அதன்படி, 650 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவான நில அடுக்குகளில் ‘இரிடியம்’ என்ற தனிமம் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது பூமியில் மிக அரிதாகக் காணப்படும் தனிமம். விண்கற்களில் இந்தத் தனிமம் அதிகமாக உள்ளது. எனவே, பூமியில் விழுந்த விண்கல்லில் இருந்து இரிடியம் வந்திருக்கக்கூடும் என்று லூயிஸ் கூறினார். அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில், பல மைல் அகலம் கொண்ட ஒரு ராட்சத விண்கல், பூமியில் மோதியிருக்கலாம், அந்த மோதலால் டைனோசர்கள் அழிவைச் சந்தித்திருக்கக்கூடும் என்று லூயிஸ் தெரிவிக்கிறார்.
ஆனால் இன்றைய பறவைகள், டைனோசர்களில் இருந்து பரிணமித்தவைதான். எனவே ஒரு விண்கல் மோதலால் டைனோசர்கள் முற்றிலுமாக அழிந்துபோயின என்பதை ஏற்க முடியாது என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர்.
கென்டக்கி பீட்டர்ஸ்பர்க் உள்ள அருங்காட்சியக பொறுப்பாளரும் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளருமான அந்தோணி உதுமான் கூறும் போது டைனோசர்கள் விண்கற்களால் அழியவில்லை அவர்கள் ஓரின சேர்க்கை மூலமாகவே அழிந்ததாக கூறுகிறார்.
டாக்டர் அந்தோணி உதுமான் கூறியதாவது:-
பூமியில் வாழ்ந்த பெரும்பாலான டைனோசர்கள் விண்கற்களால் அழியவில்லை என நான் சொல்லவில்லை. ஆனால் அது முக்கிய காரணமில்லை என சொல்கிறேன். ஓரின சேர்க்கை தான் டைனோசர்கள் அழிவுக்கு வழிவகுத்தது. அல்லது விண்கற்கள் தாக்குதல்கள் அல்ல.
ஊர்வன விலங்குகளிடம் ஓரின சேர்க்கை நடைமுறையில் இருந்து உள்ளது. அதே போன்று டைனோசர்களிடமும் ஓரின சேர்க்கை இருந்ததாக மரபணு சோதனை மூலம் வரையறுக்கப்படுகிறது என கூறி உள்ளார்.