இந்தி பட உலகில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் கங்கனா ரனாவத் முக்கியமானவர். தேசிய விருது வாங்கியுள்ள இவர், இந்த ஆண்டின் சிறந்த பெண்மணி விருதையும் பெற்றிருக்கிறார்.
இந்தி நடிகைகள் ஜிம்முக்கு சென்று உடம்பை கச்தமாக வைத்துக்கொள்கிறார்கள். சமீபத்தில் திரைக்கு வந்த ‘பார் பார் தேக்கோ’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் சித்தாத் மல்ஹோத்ரா கத்ரீனா கைப் நடித்திருந்த இந்த படத்தை பார்த்தவர்கள் எல்லோரும் கத்ரீனா கைப்பின் இடையழகை பற்றி தான் பேசினார்கள். இதுபற்றி மனம் திறந்துள்ள கங்கனா ரனாவத்….
“பார் பார் தேக்கோ படத்தில் அனைவரும் கத்ரீனா இடுப்பை புகழ்கிறார்கள். என்னை யாரும் அப்படி பார்ப்பதில்லை. நானும் ஜிம்முக்கு போகிறேன். ஆனால் நான் ஜிம்முக்கு போவது பற்றியோ, நான் உணவு கட்டுப்பாட்டில் இருப்பது பற்றியோ யாரும் சொல்வது இல்லை. என் இடை அழகு பற்றியும் ஒருவரும் பேசுவதே இல்லை” என்று வருத்தப்பட்டிருக்கிறார்.