அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற மாடல் அழகி கிம் கர்தாசியன். இவர் சமீபத்தில் ஆடை அலங்கார நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக பாரீஸ் சென்றார். அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தபோது, காவல்துறை அதிகாரிகள் போல் வேடமணிந்த மர்ம நபர்கள் திடீரென அவரது அறைக்குள் புகுந்தனர்.
அப்போது உள்ளே இருந்த கிம் கர்தாசியனை அவர்கள் துப்பாக்கி முனையில் பிணைய கைதியாக பிடித்து வைத்துள்ளனர். இந்த செய்தியை அறிந்த கிம் கர்தாசியனின் கணவர் கான்யே வெஸ்ட் தனது இசை நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்திவிட்டு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.
ஓட்டல் அறையில் கிம் கர்தாசியனை பிணைய கைதியாக பிடித்து வைத்துள்ளவர்கள் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. இருப்பினும், ஓட்டல் அறைக்குள் புகுந்து ஒருவரை பிணைய கைதியாக பிடித்துள்ள சம்பவம் பாரிஸீல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.