ஹர்ஷ் நாகர் என்ற சட்ட பட்டதாரி, டெல்லி ஐகோர்ட்டில் ஒரு பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், ‘மராட்டிய மாநிலத்திலும், சில தென் மாநிலங்களிலும் சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயம் என்பது அமலில் உள்ளது.
அதுபோல், டெல்லியில் உள்ள சினிமா தியேட்டர்களிலும் திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன்பு தேசிய கீதம் இசைப்பதை கட்டாயம் ஆக்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக்கும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இம்மனு, தலைமை நீதிபதி ரோகிணி, நீதிபதி சங்கீதா திங்க்ரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு 17–ந் திகதி விசாரணைக்கு வருகிறது.