இங்கிலாந்தின் கவர்ச்சி மாடல் கிம்பர்லி ஐ.எஸ் அமைப்பின் சமூகவலைதளம் வாயிலாக தொடர்பு கொண்டதாகவும், அந்த அமைப்புக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருவதாகவும் பிரித்தானிய உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளன.
இதனையடுத்து அவரை கண்காணிப்பில் வைத்திருந்த எம்ஐ 5 மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு பொலிசார் தற்போது அவரை அதிரடியாக கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
வெள்ளியன்று கைது செய்யப்பட்ட மொடல் கிம்பர்லி ஏற்கனவே பல முறை அதிகாரிகளால் எச்சரித்து அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறிய கிம்பர்லி குறித்து செய்தி வெளியிட்ட உள்ளூர் பத்திரிகை ஒன்று ஆயுதம் தாங்கிய புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டது.
ஆனால் குறித்த புகைப்படம் போலியானது எனவும் தான் இஸ்லாம் மதத்திற்கு மாறவில்லை எனவும் கிம்பர்லி தெரிவித்துள்ளார்.
பிரபல தனியார் பத்திரிகை ஒன்றில் கிம்பர்லியின் நிர்வாண புகைப்படம் வெளிவந்து சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.