இந்திய கிரிக்கெட் அணி தலைவர் டோனியின் மனைவி சாக்சி, அருண் பாண்டே, சுபாவதிபாண்டே மற்றும் பிரதிமா பாண்டே ஆகியோர் ரிதி எம்.எஸ்.டி. அலமோடே பிரைவேட் நிறுவனத்தின் இயக்குனர்களாக உள்ளனர். இவர்கள் மீது குருகிராமத்தைச் சேர்ந்த டென்னிஸ் அரோரா என்பவர் பண மோசடி புகார் அளித்துள்ளார்.
அவர் தனது புகார் மனுவில், தனது தந்தை விகாஸ், தன்னிடம் இருந்த ஸ்போர்ட்ஸ்பிட் வேர்ல்டு நிறுவனத்தின் 39 சதவீத பங்குகளை ரிதி எம்.எஸ்.டி. அலமோடே பிரைவேட் நிறுவன இயக்குனர்களிடம் விற்பதற்கு ரூ.11 கோடிக்கு ஒப்பந்தம் செய்ததாகவும், இதில் ரூ.2.25 கோடி மட்டுமே கொடுத்து விட்டு மீதி தொகையை கொடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, சாக்சி உள்ளிட்ட 4 பேர் மீதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், சாக்சி தங்கள் நிறுவனத்தைவிட்டு வெளியேறி ஓராண்டுக்கும் மேலாக ஆகிவிட்ட நிலையில் அவர் மீது இப்போது எப்படி எப்ஐஆர் பதிவு செய்ய முடியும்? என கேள்வி எழுப்பினார். இதுதொடர்பான வழக்கு தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருப்பதாகவும், இந்த சூழ்நிலையில் வழக்கு பதிவு செய்திருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.