இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் 2-வது படம் ஆஸ்திரேலியாவில் உருவாகிறது. இதில் ராதிகா,குஷ்பு, ஊர்வசி, சுஹாசினி நடிக்கிறார்கள்.
இது அவுஸ்திரேலியாவில் வாழும் நான்கு நடுத்தர வயது பெண்களின் வாழ்க்கைபற்றிய கதை.
அங்கு அவர்கள் வாழும் வாழ்க்கையும், சம்பவங்களையும் இந்த படத்தில் காமெடியாக சொல்லி இருக்கிறார்கள்.
அங்குள்ள சாலையில் 4 பேரும் சைக்கிளில் செல்வது போன்ற காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு முழுவதையும் ஆஸ்திரேலியாவிலேயே நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக நாயகிகள் 4 பேருடன் படக்குழுவினர் அவுஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளனர்.
இங்கு படப்பிடிப்பு முடித்த பிறகு, ஒரு சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.