பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் அங்குள்ள டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில்,
‘1996-ம் ஆண்டில் கிரிக்கெட்டில் சூதாட்டம் அதிகமாக இருந்தது. நான் அதில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தேன். அந்த காலகட்டத்தில் பாகிஸ்தான் வீரர்களில் ஓய்வு அறை மிகவும் விசித்திரமாக இருந்தது.
அப்போது வீரர்கள் அறை மிகவும் மோசமானதாக இருந்தது. சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் இருந்து நான் விலகி இருந்ததுடன், சக வீரர்களையும் எச்சரிக்கை செய்தேன்’ என்று தெரிவித்தார்.