இந்தியாவில் புற்றுநோயால் உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ ஆய்வு கழகம் தெரிவித்து உள்ளது.
குறிப்பாக மார்பக புற்று நோயால் பெண்கள் அதிக அளவில் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
2012-ம் ஆண்டில் 39 ஆயிரத்து 234 பேரும், 2013-ம் ஆண்டில் 40 ஆயிரத்து 509 பேரும் 2014-ம் ஆண்டு 41 ஆயிரத்து 851 பேரும் மார்பக புற்றுநோயால் இறந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
2015-ம் ஆண்டில் 62 ஆயிரம் பெண்கள் மார்பக புற்றுநோயால் உயிரிழந்திருக்கின்றனர். இவர்கள் புற்று நோய் தொடர்பாக உயிரிழந்த மொத்த பெண்களில் 24 சதவீதம் பேர் ஆவர்.
அடுத்த 3 ஆண்டுகளில் அதாவது 2020-க்குள் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை 17 லட்சத்தை தாண்டும் என இந்திய மருத்துவ ஆய்வு கழகம் தெரிவித்து இருக்கிறது.