இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்குத்தான் இந்திய அணி முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
நேற்றுடன் 2-வது டெஸ்ட் போட்டி முடிவடைந்தது. 3-வது போட்டி மொகாலியில் 26-ந் திகதி தொடங்குகிறது.
மீதமுள்ள மூன்று போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் இடம்பிடித்த காம்பீர் 2-வது போட்டியில் இடம்பெறவில்லை. லோகேஷ் ராகுல் உடற்தகுதி பெற்றதால் காம்பீருக்கு இடம் கிடைக்காமல் போனது. இதனால் காம்பீர் ரஞ்சி தொடரில் விளையாட சென்று விட்டார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் இருந்து காம்பீர் நீக்கப்பட்டுள்ளார். அதற்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
3-வது போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. கோலி, 2. ரகானே, 3. லோகேஷ் ராகுல், 4. முரளி விஜய், 5. புஜாரா, 6. கருண் நாயர், 7. சகா, 8. அஸ்வின், 9. ஜடேஜா, 10. ஜயந்த் யாதவ், 11. மிஸ்ரா, 12. ஷமி, 13. உமேஷ் யாதவ், 14. இசாந்த் சர்மா, 15. புவனேஸ்வர் குமார், 16. ஹர்திக் பாண்டியா.