வித்யாபாலன் சில வருடங்களுக்கு முன்பு தொழில் அதிபரும் சினிமா தயாரிப்பாளருமான சித்தார்த்ராய் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன்பிறகு கணவன் – மனைவி எங்கும் ஜோடியாக செல்வது இல்லை. இதனால் இருவரும் விவாகரத்து செய்யும் முடிவில் இருக்கிறார்கள் என்று செய்தி பரவியது.
இதற்கு பதில் அளித்துள்ள வித்யாபாலன், “எங்களுக்குள் இருக்கும் அன்பை நாங்கள் ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திக் கொண்டால் போதும். விழாக்களில் இடுப்பில் கையோட்டு ஜோடியாக நடந்து அதை செல்பி எடுத்து வெளி உலகுக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
நான் நடிகை. நடிப்பில் கவனம் செலுத்துகிறேன். அவர் தொழில் அதிபர். அதில் அக்கறை கட்டுகிறார். கணவன்-மனைவி என்பது எங்களுக்குள் இருக்கட்டும்” என்று கோபத்துடன் கூறி இருக்கிறார்.