மலையாள நடிகர் திலீப் – காவ்யா மாதவன் இருவரும் நேற்று மறுமணம் செய்து கொண்டார்கள்.
ஏற்கனவே, இவர்கள் நெருக்கமாக இருப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியாகின. அதை உறுதி செய்வதுபோல நேற்று இந்த ஜோடி திடீர் திருமணம் செய்து கொண்டது.
இதுபற்றி காவ்யா மாதவன் செய்தியாளர்களிடம் கூறியது….
“என்னையும் திலீப்பையும் பற்றி கிசுகிசுப்பதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். நானும் திலீப்பும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மலையாள ரசிகர்கள் விரும்பினார்கள். அவர்கள் விருப்பம் இப்போது நிறைவேறிவிட்டது”.
திலீப் இதுபற்றி கூறும்போது, “ என் வாழ்வில் நடந்த சில பிரச்சினைகளுக்கு காவ்யா மாதவன் பொறுப்பு அல்ல” என்றார்.
திலீப்-காவ்யா மாதவன் இருவரும் 18 படங்களுக்கு மேல் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்கள். இப்போது வித்தியாசமான சூழ்நிலையில் இருவரும் திருமண வாழ்க்கையில் ஜோடி சேர்த்திருக்கிறார்கள்.
வழக்கமான சினிமா போல அல்லாமல் இருவரும் இறுதி வரை இணைந்து வாழ வேண்டும் என்பதே இவர்களுடைய ரசிகர்களின் விருப்பம். அதுவும் நிறைவேறினால் ரசிகர்கள் வாழ்த்துவார்கள்.