சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலம் பாவனா. இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
4 மாதங்களாக இவரை எந்த நிகழ்ச்சிகளிலும் பார்க்க முடியவில்லை, உடனே எல்லோரும் இவர் கர்ப்பமாக இருக்கிறார் என கூறிவிட்டனர்.
அதற்கு இவர் ‘நான் எங்கும் போகவில்லை, இங்கேயே தான் இருக்கிறேன், மும்பையில் வசித்து வருகிறேன்.
அங்கு நிறைய ஷோ தொகுத்து வழங்கி வருகிறேன், வாரத்திற்கு ஒருமுறை தமிழகம் வந்து ஷோ நடத்திக்கொடுத்துவிட்டு செல்வேன்.
தற்போது மீண்டும் சூப்பர் சிங்கர் ஆரம்பிக்கவுள்ளது, விரைவில் அதிலும் கலந்துக்கொள்வேன், மேலும், நான் கர்ப்பமாக இல்லை, அப்படி இருந்தாலும், டெலிவெரி முந்தய நாள் வரை வேலைப்பார்ப்பவர்களை நான் பார்த்துள்ளேன்.
அதனால், ஒரு போதும் என் வேலை பாதிக்காது’ என கூறியுள்ளார்.