சின்னத்திரையில் ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு என பெரிய ரசிகர்கள் வட்டம் இருக்கும். அப்படித்தான் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெரும் டாக் ஷோவிற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கின்றது.
இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்குவார், இந்த நிகழ்ச்சி ஞாயிறு இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பு ஆகி வந்தது.
ஆனால், தற்போது மதியம் 3 மணிக்கு மாற்றியுள்ளனர், இதுக்குறித்து விசாரிக்கையில் மதியம் 2 மணி அளவில் சிரிப்பு நிகழ்ச்சி ஒன்றை ஒளிப்பரப்பி வருகிறோம்.
அதன் தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சியை ஒளிப்பரப்பு செய்தால், புது ஆடியன்ஸ் கிடைக்க வாய்ப்புள்ளது, அதனால் தான் இந்த முடிவு என தொலைக்காட்சி நிறுவனம் கூறியுள்ளது.