முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து பல கருத்துக்கள் உலா வருகின்றது. மேலும், ஒரே நாளில் இவரின் உடலை நல்லடக்கம் செய்தது பலருக்கும் வருத்தம் தான்.
இந்நிலையில் இதற்கு தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கை ஒன்று விளக்கம் கூறுகையில் நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு துவங்கிய அஷ்டமி, நேற்று இரவு, 9:21 மணி வரை நீடித்தது. இதனால், அஷ்டமி துவங்க, நான்கு மணி நேரத்திற்கு முன், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது என, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாக தெரிவித்துள்ளது.
மேலும், ஏற்கனவே சிகிச்சையில் இருந்த உடல் என்பதால் உடனே நல்லடக்கம் செய்திருக்கலாம் எனவும் சிலர் கூறுகின்றனர்.