கமல்ஹாசன் தற்போது சபாஷ் நாயுடு படப்பிடிப்பில் உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வருகின்றது.
இந்நிலையில் கமல் அவ்வப்போது தன் டுவிட்டர் பக்கத்தில் ஏதாவது கருத்துக்கள் தெரிவிப்பார்.
அப்படித்தான் சமீபத்தில் ஒரு கருத்தை கூறியுள்ளார், அவை எதற்கு என்று தெரியாமல் ரசிகர்களே குழம்பி போய் உள்ளனர். ஆனால், பலரும் இந்த பதிவிற்கு கீழ் இது கௌதமிக்காக தான், அவரின் சமீபத்திய செயல்களை கண்டிக்கும் விதம் தான் இந்த பதிவு என கூறுகின்றனர்.
கௌதமி மோடியை சந்தித்தது, ஜெயலலிதா மரணம் குறித்து சமீபத்தில் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.