ஹிந்தி சீரியலில் மிகவும் பேமஸ் கிரைம் பேட்ரோல். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் கமலேஷ் பாண்டே.
இவர் சமீபத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார், இதுக்குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால், தற்போது வந்த தகவலின்படி அவரின் மனைவியின் சகோதரி வீட்டில் ஒரு திருமணம் நடந்ததாம், அதற்கு இவரை அழைக்கவில்லையாம்.
இதனால் தான் மனம் நொந்து குடித்துவிட்டு, தன்னை தானே சுட்டுக்கொண்டார் என்று ஒரு செய்தி வந்துள்ளது, இதை கேட்ட பலரும் இதற்காகவா இப்படி ஒரு முடிவெடுத்தார் என தலையில் அடித்து நகர்கின்றனர்.