மெக்சிகோவில், ஒரு பதின்ம வயது பெண்ணின் தந்தை, தனது மகளின் பிறந்தநாள் விழாவுக்கு அனைவரும் வரலாம் என்று சமூகவலைதளத்தில் அழைப்பிதழ் அனுப்பியது வைரலாக பரவியதால், பல ஆயிரக்கணக்கான மக்கள் அப்பெண்ணின் பிறந்தநாள் விழாவுக்கு வருகை புரிந்தனர்.
மெச்சிகோவின் மத்திய மாநிலமான சான் லூயிஸ் பொட்டோஸியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் ரூபி இபாரா என்ற அந்த இளம் பெண்ணின் 15-ஆவது பிறந்தநாள் விழாவுக்கு சென்று தாங்கள் கொண்டாடப் போவதாக, ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபேஸ்புக் சமூகவலைதள பயன்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஒரு காணொளியில் கருத்து தெரிவித்த ரூபியின் தந்தையான கிரஸன்ஷியோ, தனது மகளின் பிறந்தநாள் விழா அழைப்பு உள்ளூர் மக்களுக்கு மட்டுமே என்று தெளிவுபடுத்தினார்.
ஆனால், தனது மகளின் பிறந்தநாள் விழாவுக்கு வந்த யாரும் திரும்ப அனுப்பப்படமாட்டார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.