நடிகர் கமல்ஹாசன் தன்னை பற்றிய கருத்துகளையும், பொது விசயங்கள் குறித்தும் அவ்வப்போது தனது சமூகவலைதளங்களில் பதிவுகளை போட்டுவருகிறார்.
ஜெயலலிதாவின் மறைவின் போது வரமுடியாத சூழ்நிலையால் தனது இரங்கலை ட்விட்டர் மூலம் தெரிவித்திருந்தார்.
சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என அவர் அதில் பதிவிட்டிருந்தார்.
பிறகு டிசம்பர் 11 அன்று அவர் வெளியிட்ட பதிவு சில கேள்விகளை எழுப்பிவருகிறது. இதில் அவர் சொன்னது சசிகலாவை தான் என் அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
இதன் அர்த்தம் இப்போது களத்தில் இறங்கியிருப்பவர்கள் அனுபவம் இல்லாதவர்கள். களத்தைல் இறங்காமல் இருப்பவர்களும் கோழை கிடையாது. இவர்கள் வீரரும் அல்ல. பிறந்து இறந்தவர்களால் பிழையும் இல்லை, நிறையும் இல்லை என்பதே அவர் வெளியிட்ட பதிவின் அர்த்தமாகும். இது பலரையும் குழப்பியுள்ளது.