பிரேசில் நாட்டின் அமேசானில் உள்ள மனவுஸ் நகரில் உள்ள சிறை ஒன்றில் இன்று பயங்கர கலவரம் ஏற்பட்டது. போதைப் பொருள் கும்பல்களிடையே இந்த கலவரம் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பயங்கர கலவரத்தில் சுமார் 60 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதில் சிலரது உடல்கள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சிறையின் சுவர் வழியாக வீசப்பட்டது.
இதனையடுத்து சிறையில் இருந்து எவ்வளவு பேர் தப்பித்து சென்றனர் என்பது குறித்து அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.
பிரேசில் நாட்டில் சிறைக் கலவரம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்த கலவரம் மிகவும் மோசமானது என்று செய்திகள் கூறுகின்றன.
முன்னதாக, கடந்த 1992-ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் 111 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.