ஆப்ரிக்க நாடான ஜாம்பியாவில் மகளிருக்கு உதவும் வகையில் புரட்சிகரமான சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது.
அதன்படி அங்குள்ள மகளிருக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு அளிக்கப்படுகிறது.
அதை மறுக்கும் நிறுவனங்கள் மற்றும் முதலாளிகள் மீது வழக்கு தொடுத்து நீதிமன்றத்தில் நிறுத்த முடியும்.
இச்சட்டத்தை பலர் வரவேற்றாலும், சிலர் இது தவறாகப் பயன்படுத்தக் கூடும் எனும் அச்சமும் கவலையும் வெளியிட்டுள்ளனர்.