உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த விபின் என இளைஞர் இரத்த சோகை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் சிகிச்சைக்காக பெற்றோர் பணம் செலவழித்தும் இதுவரை எந்த பலனும் இல்லை.
இந்நிலையில் ஏழை பெற்றோரான அவர்கள், இதுதொடர்பாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், மகனின் சிகிச்சை செலவுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சிகிச்சை அளித்தும் பயனில்லையெனில் அவரை கருணைக் கொலை செய்ய அனுமதி அளிக்குமாறும் கோரியுள்ளனர்.