வியட்நாமில் வயது வந்தோர் அனைவரும் நாட்டிலுள்ள அலட்சியப்படுத்தப்பட்ட ரத்த வங்கிகளுக்கு தங்களுடைய ரத்த தானம் செய்வதற்கான சட்ட வரைவை அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
18-இல் இருந்து 60 வயது வரையான ஆரோக்கியமான நபர்கள் குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒருமுறை ரத்த தானம் செய்வதை இந்த சட்டம் கட்டாயமாக்கும்.
நாடாளுமன்ற அனுமதி பெற வேண்டியுள்ள இந்த சட்ட வரைவால் வியட்நாம் மக்கள் கடும் கோபம் அடைந்துள்ள நிலையில், இது மனித உரிமைகள் மீறலாக அமைவதாக என்று சிலர் வாதிடுகின்றனர்.