துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது என பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாக ரஜினி பேசியதற்கு சரத்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் எந்த வகையான அசாதாரண சூழல் தமிழகத்தில் நிலவுகிறது என்பதை ரஜினி தெளிவுபடுத்த வேண்டும் என்று சரத்குமார் வலிறுயுத்தியுள்ளார்.
மேலும் தமிழ்நாட்டு அரசியல் குறித்து கருத்து கூற ரஜினிக்கு எந்த தகுதியும் இல்லை அவர் தமிழக அரசியலுக்கு வந்தால் எதிர்க்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன் என்று சரத்குமார் கூறியுள்ளார்.