தெய்வம் தந்த வீடு சீரியல் மூலம் மாமியார்கள் மனிதில் நம்பிக்கையான இடம் பிடித்தவர் சீரியல் நடிகை மேக்னா வின்சென்ட்.
தமிழ் சீரியலில் வேண்டுமானால் இவர் புதுமுகமாக இருக்கலாம். ஆனால் கேரளா சீரியல்களில் இவர் பலருக்கும் நன்கு அறிமுகமாகிவரே.
அவர் சொன்னது, சிறு வயதிலிருந்து நடிக்க தொடங்கிய நான் பாப்பி என்ற குடை விளம்பரத்தில் தான் அறிமுகமானேன். பின் சுவாமியே சரணம் ஐயப்பா, ஆட்டோகிராப் சீரியலில் நடித்தேன்.
பின் கயல் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது என்னை தேடி வந்த வாய்ப்பு தான் தெய்வம் தந்த வீடு. எனக்கு கதை பிடித்திருந்ததால் உடனே ஓகே சொல்லிவிட்டேன்.
மலையாளத்தில் சந்தனமழா என்னும் பெயரில் ஒளிபரப்பாகும் இது மொத்தம் 6 மொழிகளில் ஒளிபரப்பாகிறது. இப்போதும் பிசியாகத்தான் நடித்துக்கொண்டிருக்கிறேன். பெரியத்திரை வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்.
எனக்கு வரப்போகும் கணவர் தோனி தொழிலதிபராக இருக்கிறார். அவருடைய சகோதரியும் நானும் சிறுவயதிலிருந்தே தோழிகள். அதனால் அவரிடம் எனக்கு நடப்பு ஏற்பட்டது.
ஒரு நாள் அவரது அம்மா என்னிடம் என மகனை திருமணம் செய்துகொள்கிறார் என கேட்டார். என்னை புரிந்துகொண்டால் போதும். படிப்பு, வேலை என எதிர்பார்க்கவில்லை என்றேன்.
கொஞ்ச நாள் போகட்டும் என்றேன். இதுவே எனது கண்டிஷன். கடந்த வருடம் ஏப்ரல் 22 கேரளாவிலுள்ள எர்ணாகுளத்தில் நிச்சயதார்த்தமும், பின் அதே மாதம் 30 ம் திகதி திருச்சூரில் எங்களது திருமணம் நடைபெற்றது .