தனுஷ் நடித்த திருடா திருடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாயா சிங். அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்து வந்தவர் கன்னடம், போஜ்புரி மொழிப்படங்களிலும் நடித்தார்.
பின் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் போக கன்னடம், தெலுங்கு சிரீயல்களில் சின்னத்திரையில் நடித்து வந்தார். தமிழில் நாகம்மா என்னும் தொடரில் நடித்து வந்தார்.
பின் இது கதிர்வேலன் காதல் என்னும் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரீ கொடுத்தார். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் இப்போது சின்னத்திரையே வேண்டாம் என முடிவெடுத்துள்ளாராம்.
இப்போது முழுக்க முழுக்க தமிழ் சினிமாவில் மட்டும் நடிப்பதில் முழுகவனம் செலுத்துவேன். மேலும் இனி நான் படமும் எடுப்பேன், சீரியலிலும் எடுப்பேன் என அவர் கூறியுள்ளார்.