இதுவரை தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் சில நாட்கள் முன்பு ராஜினாமா செய்தார். ஆனால் இன்று ஜெயலலிதா சமாதியில் செய்தியாளர்களை சந்தித்து பல அதிர்ச்சி செய்தியை வெளியிட்டார்.
தான் சசிகலா தரப்பால் மிரட்டப்பட்டு தான் பதவியில் இருந்து விலகவைத்தார்கள் என கூறினார்.
மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்ப பெறுவேன் என கூறினார். இப்படி தைரியமாக கருத்து கூறியுள்ள ஓபிஎஸ் பற்றி பிரபலங்கள் கருத்து கூறிவருகின்றனர்.
புதிய ஹீரோ உருவாகிவருகிறார் என நடிகை குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.