காதல் பிரச்சினைகளை தன்னால் தீர்வு காண முடியும் என்றும் தான் ஒரு “உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற ஜோதிடர் மற்றும் சக்திவாய்ந்த ஆன்மீகவாதி என்றும் மக்களை பாலியல் ரீதியாக ஏமாற்றி வந்தவர் பாஸ்கர் முனியப்பா.
இதற்காக இவர் தனது மாய மந்திர வித்தையையும் பயன்படுத்திக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
பாஸ்கர் முனிப்பா காதல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களில் சுண்ணாம்பு துண்டுகளை தேய்த்து, அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து குணப்படுத்துவதாக ஏமாற்றியுள்தாக வழக்கறிஞர் போல் சம்போனினி தெரிவித்துள்ளார்.
32 வயதான பாஸ்கர் முனிப்பா, 2014 ம் ஆண்டு இரண்டு பெண்களை பாலியல் ரீதியாக துண்புறுத்திய குற்றத்திற்காக நாளை புதனன்று நீதிமன்றத்தால் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, விவாகரத்து பெற்ற பெண் ஒருவர் தனது கணவனுடன் சமரசம் செய்துகொள்வதற்காக 750 அமெரிக்க டொலர்களை பாஸ்கர் முனிப்பாவுக்கு வழங்கியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
“காதல் பிரச்சினைகள்” களுக்கு தீர்வு எனும் விளம்பரத்தை பார்த்த பின்னரே குறிப்பிட்ட பெண் முனியப்பாவை நாடியுள்ளதாகவும் சம்போனினி குறிப்பிட்டுள்ளார்.
இதோ போல் இவ்வாறு இரண்டாவதாக பாதிக்கப்பட்ட பெண், பாஸ்கர் தனது மார்பகங்களை செப்டம்பர் 11, 2014 தொட்டு தன்னை துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட இரு பெண்களின் அடையாளங்களும் வௌியிடப்படவில்லை.