வாணி ராணி தொலைக்காட்சி தொடர் கள்ளக்காதல் கதை, அடுத்தவர் குடும்பத்தை கெடுப்பது எப்படி, கணவன் மனைவி இடையே சண்டை மூட்டி விட்டு பிரிப்பது எப்படி என்றே காட்சிப் பகுதிகள் எடுக்கப்படுகின்றன.
இப்போது அந்த சீரியல் போன்றே நிஜத்திலும் இப்போது கள்ளக்காதல் அரங்கேறி நடுவீதியில் சண்டை அரங்கேறியுள்ளதால் டி.ஆர்.பி எகிறியுள்ளது.
டிவி சீரியல்களில் அதிகம் முகம் வரவேண்டுமா? அதிக எபிசோடுகளில் தலை காட்ட வேண்டுமா? இயக்குநர்களையோ, மேனேஜர்களையோ அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதி.
அப்படி அட்ஜஸ்ட் செய்யாதவர்களின் படத்திற்கு மாலை போட்டு விடுவார்கள்.
இல்லையா இவருக்கு பதில் இவர் என்று ஆளையே மாற்றி விடுவார்கள்.
சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் நடிகைகளுக்கு இந்த சிக்கல் இல்லை.
ஆனால் வளர்ந்து வரும் நடிகைகள் படும் துயரத்தைக் கேட்டால் 5000 எபிசோடுகளுக்கு அதிகமான மிக நீண்ட சீரியலே எடுக்கலாம்.
சீரியலில் புதிதாக திருமணமான தம்பதியை பிரிப்பதுதான் அந்த நடிகைக்கு கொடுத்த அசைன்மெண்ட். வாடகைக் கார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து இளம் பெண்ணின் நெஞ்சில் நஞ்சை கலந்து அமைதியான பெண்ணில் மனதை புயலை வீச வைத்து விட்டு இப்போது வெளியேறி விட்டார் சபீதா ராய்.
இப்போது நல்ல பிள்ளை போல உங்கள் கணவர் அப்படியில்லை என்று கூறினால் அதைக் கேட்டு மீண்டும் கணவனுடன் சேர்ந்து வாழ்ந்து விடுவாளா என்ன?
எந்த சம்பந்தமும் இல்லாமல் ஏன் அந்த நடிகைக்கு இத்தனை முக்கியத்துவம் தந்தனர் என்பது இப்போது நள்ளிரவு சண்டை காட்சிகள் ஊடகங்களில் சந்தி சிரித்த பின்னரே தெரிகிறது.
வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் என்று கூறி சபீதாராயை வரவழைத்து அவளை ஏமாற்றியதாலேயே இப்போது விசயம் வீதிக்கு வந்துள்ளது.
சீரியலில் கணவன் மனைவியை பிரிக்கும் கதாபாத்திரத்தில் நடித்த அந்த நடிகைக்கு இப்போது நிஜத்தில் மனைவி இல்லாத நேரத்தில் தனியாக வீட்டில் இருக்கும் ஆணை சந்திக்க போகலாமா என்ற யோசனை கூடவா இருக்காது?.
போவானேன் பிறகு முடியை பிடித்து இழுத்து அடி வாங்குவானேன். இந்த சபீதா ராய் மட்டுமல்ல சின்னத்திரையில் பல நடிகைகளின் வாழ்க்கையும் இப்படி சோக கீதம் பாடுவதாகவே உள்ளது என்கின்றனர் சின்னத்திரையால் பாதிக்கப்பட்டு ஆளை விடுங்கடா என்று விலகியவர்கள்.